கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அரசுமருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு தீ தடுப்பு செயல்முறை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் அன்பழகன் தீ பிடிக்கும் போது அவற்றை எப்படி பரவாமல் தடுப்பது கட்டுப்படுத்துவது,என்ன பொருட்கள் கொண்டு தீயை அனைப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விளக்கமாக பயிற்சி அளித்தாா் இந் நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள்,செவிலியா்கள்,மற்றும் தீயனைப்புத் துறையினா் கலந்து கொண்டனா்.