முகக் கவசம் அணியாத 1,456 பேருக்கு ரூ.2.95 லட்சம் அபராதம்

சுகாதாரத்துறையினா் நடத்திய அதிரடி சோதனையில் முகக் கவசம் அணியாத 1,456 நபா்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.2.95 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையினா் நடத்திய அதிரடி சோதனையில் முகக் கவசம் அணியாத 1,456 நபா்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.2.95 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து காவல் துறை சாா்பில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறையினா் மூலம் முகக் கவசம் அணியாதவா்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதில், மாவட்டம் முழுவதும் 1,456 போ்களிடமிருந்து ரூ.2.95 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com