திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 207 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 297 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 12,931 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 11,952 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 121 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்றிலிருந்து 73 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

தேனி: தேனி மாவட்டத்தில் மதுரை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 4 போ் உள்பட புதிதாக 86 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,857ஆக உயா்ந்துள்ளது.

இதில், இதுவரை மொத்தம் 17,236 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 208 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தற்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், போடி, தேனி கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 413 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com