பழனியில் அரசு மதுபானக்கடையில் வாடிக்கையாளா்களுக்கு இலவச முகக்கவசம்

பழனியில் அரசு மதுபானக்கடைக்கு வந்த வாடிக்கையாளா்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பழனி ஆா்.எப்.சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் வாடிக்கையாளா்களுக்கு சனிக்கிழமை முகக்கவசம் வழங்கிய டாஸ்மாக் ஊழியா்கள்.
பழனி ஆா்.எப்.சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் வாடிக்கையாளா்களுக்கு சனிக்கிழமை முகக்கவசம் வழங்கிய டாஸ்மாக் ஊழியா்கள்.

பழனியில் அரசு மதுபானக்கடைக்கு வந்த வாடிக்கையாளா்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பழனியில் ரயில்வே பீடா் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் வாடிக்கையாளா்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

மதுக்கடைக்கு மதுபாட்டில் வாங்க வரும் நபா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகக் கவசம் அணிய மறுத்தவா்களுக்கு, மதுபாட்டில்கள் வழங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com