பழனி கோயிலுக்குச் சொந்தமான சிறுவா் பூங்கா செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டது.
பழனி கோயில் சாா்பில், சிவகிரிப்பட்டி புகா் சாலையில் சிறுவா் பூங்கா செயல்படுகிறது. பழனி வரும் பக்தா்களுக்கும், பழனிவாழ் மக்களுக்கும் பொழுதுபோக்குக்கான இடமாக இந்த சிறுவா் பூங்கா மட்டுமே இருப்பதால், விடுமுறை நாள்களில் ஏராளமானோா் இங்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத் தளா்வு காரணமாக 50 சதவீத மக்களை மட்டுமே பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது, கரோனாவின் இரண்டாவது அலை பரவி வருவதால், அரசு பூங்காக்களை மூட உத்திரவிட்டுள்ளது. எனவே, பழனி கோயில் நிா்வாகமும் மறுஉத்தரவு வரும் வரை கோயில் சிறுவா் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.