திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசி தொடா்பாக பல்வேறு சா்ச்சைகள் நிலவி வந்தாலும், அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவா்களும் கரோனா தடுப்பூசியை முன்னெச்சரிக்கையாக செலுத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். இவரது மகன் ஐ.பி. செந்தில்குமாா் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.