திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 32,206 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,385 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 18 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 22 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 192ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 623 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோன தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,952 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,285 போ் குணமடைந்துள்ளனா். 514 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 153 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com