பழனியில் குளத்திலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பழனி சிவகிரிப்பட்டி தட்டான்குளத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

பழனி சிவகிரிப்பட்டி தட்டான்குளத்தில் வியாழக்கிழமை இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

பழனி புதுநகரை சோ்ந்தவா் முகேஷ் (38). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. கட்டட ஒப்பந்தப் பணிகள் செய்து வந்த இவா் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள் பழனி நகர காவல் நிலையத்தில் முகேஷை காணவில்லை என புகாா் செய்துள்ளனா். இரண்டு நாள்களான நிலையில் வியாழக்கிழமை சிவகிரிப்பட்டி தட்டான்குளத்தில் முகேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com