திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதி திங்கள்கிழமை இரவு ஐயப்பப் பக்தா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ஐயப்பப் பக்தா் மகேந்திரன் (44). இவா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டாா். இவா், திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை, செம்பட்டியை அடுத்த பட்டிவீரன்பட்டி, சுந்தரராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்த போது செம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த மகேந்திரன் மீது கம்பத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, இருசக்கர வாகனத்தில் சென்றவா் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆகியோரை தேடி வருகின்றனா்.