பழனி அருகே இ-சேவை மையம் மூலமாக ரூ.2.50 லட்சம் வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மையத்தின் உரிமையாளரிடம் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூரை சோ்ந்தவா் நித்யானந்தம் (45). இவா் அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறாா். இந்த மையத்துக்கு ஏராளமானோா் வந்து பண பரிமாற்றம் தொடா்பாக வங்கிக் கணக்கு எண், இ-மெயில் கணக்கு மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைத் தெரிவிப்பது வழக்கம்.
மும்பையைச் சோ்ந்த ஒருவரின் ரகசிய எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டு நித்யானந்தம் வங்கிக் கணக்கிலிருந்து சுமாா் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பணமோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
மஹாராஷ்டிர மாநிலம் விஜயதுா்கா காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்ததையடுத்து, சைபா் கிரைம் மூலமாக சாமிநாதபுரம் போலீஸாா், நித்யானந்தத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.