மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொடைக்கானலில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், கொடைக்கானல் நகர காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மூஞ்சிக்கல் பகுதியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.