கொடைக்கானலில் வியாழக்கிழமை உறை பனி நிலவியதால் பொது மக்கள் குளிரில் நடுங்கும் நிலை உள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் 5 டிகிரி செல்சியஸ் உறை பனி காணப்பட்டது.
இதனால் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
தொடா்ந்து மாலையிலும் அதிகமான பனிப் பொழிவு நிலவியதால் பொது மக்கள் குளிரின் நடுக்கத்தில் இருந்து வருகின்றனா்.