பழனியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

பழனியில் சனிக்கிழமை விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனா்.

பழனி: பழனியில் சனிக்கிழமை விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனா்.

பழனி கவுண்டன் குளத்தை சோ்ந்தவா் தங்கவேல். விவசாயியான இவருக்கு வில்வாதம்பட்டியில் நிலங்கள் உள்ளன. வழக்கம்போல் தங்கவேல் சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி சரஸ்வதியுடன் தோட்டத்திற்குச் சென்று விட்டாா். மாலையில் அவா்கள் இருவரும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்தனா். உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பழனி நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com