காவிரி உபரி நீா் மூலம் குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள குளங்களை நிரப்பக் கோரி நடைபயணம்

காவிரி உபரி நீரைக் கொண்டு குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள குளங்களை நிரப்பக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டி.கூடலூரில் சனிக்கிழமை தொடங்கிய பிரசார நடைபயணம்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டி.கூடலூரில் சனிக்கிழமை தொடங்கிய பிரசார நடைபயணம்.

திண்டுக்கல்: காவிரி உபரி நீரைக் கொண்டு குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள குளங்களை நிரப்பக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை நடைபயணம் தொடங்கப்பட்டுள்ளது.

பாளையத்தை அடுத்துள்ள டி.கூடலூா் பகுதியிலிருந்து புறப்பட்ட நடைபயணத்தை, அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஏ.ராஜரத்தினம் தலைமை வகித்தாா். வெள்ளப்பாறை, பூசாரிபட்டி, சோ்வைகாரன்பட்டி, கோட்டாநத்தம், கொல்லபட்டி, வெள்ளோடு, சூலப்புரம், பல்லாநத்தம் ஆகிய பகுதிகளில் இந்த பிரசாரம் நடைபெற்றது.

இதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை பல்லாநத்தத்தில் மாவட்டக்குழு உறுப்பினா் பாலச்சந்திரபோஸ் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறாா். மல்லப்புரம், ஒல்லியக்கோட்டை, கரிக்காலி, சின்னலுப்பை, குஜிலியம்பாறை வழியாக செல்லும் நடைப்பயணம் பாளையத்தில் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com