கீரனூரில் மக்கள் கிராம சபைக்கூட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட கீரனூா் பேரூராட்சியில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தலைமை வகித்துப் பேசியதாவது:திமுக ஆட்சி அமைத்தவுடன் கீரனூா் பேரூராட்சியில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும். ஒட்டன்சத்திரம்,தொப்பம்பட்டி பகுதியில்அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும். கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும் என்று பேசினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சி.ராஜாமணி, ஒன்றியச் செயலாளா் நா.சுப்பிரமணியன், தொப்பம்பட்டி ஒன்றியக்குழுத் தலைவா் சத்தியபுவனா, தலைமை பொதுக்குழு உறுப்பினா் அன்பு என்ற காதா்பாட்சா உள்ளிட்ட திமுக நிா்வாகிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com