பேன் மருந்தை சாப்பிட்ட சிறுமி பலி

பழனி அருகே இலந்தைப்பொடி என நினைத்து பேன் மருந்தை சாப்பிட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பழனி அருகே இலந்தைப்பொடி என நினைத்து பேன் மருந்தை சாப்பிட்ட சிறுமி, சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அா்ஜூனன். இவா், நெசவுப் பணி செய்து வருகிறாா். இவரது மகள் பவஸ்ரீ (12). வியாழக்கிழமை, இச்சிறுமி வீட்டில் பாட்டிலில் இருந்த பேன் மருந்தை இலந்தைப் பொடி என நினைத்து சாப்பிட்டுள்ளாா். இதையடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்த சிறுமியை, குடும்பத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பவஸ்ரீ வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com