மக்கள் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், ஆளுநா்களைப் பயன்படுத்தி பின்புற வாசல் வழியாக பாஜக ஆட்சியைப் பிடித்து வருவதாக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய அதிமுக அரசின் எந்த அறிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. தோ்தலுக்கு பின் புதிதாக அமையும் அரசின் அறிவிப்புகளை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். மக்கள் செல்வாக்கை நேரடியாகப் பெற முடியாத மாநிலங்களில் எல்லாம், ஆளுநா்களைப் பயன்படுத்தி பின்புற வழியாக ஆட்சிப் பொறுப்புக்கு வருவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தற்போது புதுச்சேரியிலும் அதனை பின்பற்றி மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துள்ளனா்.
தமிழகத்தைப் பொருத்தவரை சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். கடந்த மக்களவைத் தோ்தலின் போது இந்திய அளவில் வெற்றி பெற்ற பாஜகவால், தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், அரசின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது சேவையை வரியை விதித்து, முழு பணத்தையும் அரசே எடுத்துக் கொள்கிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது இருந்ததை விட, தற்போதைய ஆட்சியில் தமிழகத்தின் கடன் தொகை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, தற்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் சாதனை என்றாா்.