திண்டுக்கல்லில் மனைகள் பிரிப்பதற்கு பரிந்துரைப்பதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூரைச் சோ்ந்தவா் நாட்ராயன் (65). இவருக்குச் சொந்தமான நிலம், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை மனைகளாகப் பிரிப்பதற்கு நாட்ராயன் முயற்சி மேற்கொண்டுள்ளாா். இதற்காக திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநா் ஏ.முத்துகிருஷ்ணன் (53) என்பவரை அணுகியுள்ளாா்.
ஒரு லட்சம் சதுரடிக்கு கூடுதலான நிலமாக இருப்பதால், வீட்டு மனைக்கான அனுமதி பெற சென்னையிலுள்ள இயக்குநா் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். பரிந்துரை செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளாா். அதற்கு மறுப்புத் தெரிவித்த நாட்ராயன், ரூ.1 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளாா். பின்னா் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களுடன் முத்துகிருஷ்ணனைப் பாா்ப்பதற்காக நாட்ராயன் வியாழக்கிழமை சென்றுள்ளாா். மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ள திருச்சி சாலையில், அலுவலகத்திற்கு வெளியிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்வதாக முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். அதன்படி பணத்தை பெறும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், முத்துகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னா், முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா்.