திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 09th January 2021 09:26 PM | Last Updated : 09th January 2021 09:26 PM | அ+அ அ- |

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11,053 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,768 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனா். 87 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 16 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,965 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், மேலும் 7 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,692 ஆக அதிகரித்துள்ளது.