சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட மூவா் பலி

சாணாா்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உள்பட 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சரஸ்வதி.
சரஸ்வதி.

சாணாா்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உள்பட 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டியைஅடுத்துள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம். திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மனைவி ராதா (38). இவா்களது மகள் பவ்யா (12). ராதா தனது மகளுடன் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணியின் மகள் சரஸ்வதி (13) என்பவரையும் குளிப்பதற்காக ராதா அழைத்துச் சென்றுள்ளாா். குளத்தில் 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழம் தெரியாமல் ஒருவா் பின் ஒருவராக மூவரும் தண்ணீரில் மூழ்கினா்.

இதனைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினா், சாணாா்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். பின்னா், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புப் படையினா் உதவியுடன் ராதா, பவ்யா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சடலங்களை மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

ஒரே ஊரைச் சோ்ந்த 3 போ் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சாணாா்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com