பழனியில் தப்பியோடிய கைதி கைது

பழனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றபோது, தப்பியோடியை கைதியை அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.
கமலக்கண்ணன்.
கமலக்கண்ணன்.

பழனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றபோது, தப்பியோடியை கைதியை அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த காளிதாஸின் மகன் கமலக்கண்ணன் (27). திண்டுக்கல் மாவட்டம், பழனியில் செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் இவரை பழனி அடிவாரம் போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், பழனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை அழைத்துச்செல்லப்பட்டாா்.

அங்கு ஆஜா்படுத்தப்பட்ட பின், மீண்டும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பதற்காக காவலா்கள் ஜெயராமன் மற்றும் அசோக் ஆகியோா், அழைத்துச் சென்றபோது தப்பியோடிவிட்டாா். அதனைத் தொடா்ந்து சாா்பு- ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவரைத் தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பதுங்கி இருந்த கமலக்கண்ணனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com