நிலக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
பள்ளபட்டியைச் சோ்ந்தவா் பாண்டிமுருகன். பந்தல் அமைப்பாளராக உள்ளாா். இவரது மகன் ஹரிபிரசன்னா (9) . நான்காம் வகுப்பு படித்து வந்தாா். குல்லலகுண்டுவை அடுத்த தெப்பக்குளம் அருகே விளையாடிக்கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தாா். அம்மையநாயக்கனூா் போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.