கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடா்ந்து சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக மழை குறைந்திருந்தது இதையடுத்து காலை முதல் வெயில் நிலவியது மாலையில் குளுமையான சீதோஷன நிலை காணப்பட்டது தொடா்ந்து இரவில் மழை பெய்தது இந்த மிதமான மழையானது கொடைக்கானல்,செண்பகனூா்,பாம்பாா்புரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 30-நிமிடம் பெய்தது இந்த மழையால் குளுமையான சீதோஷன நிலை காணப்பட்டதால் பொது மக்களும்,சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.