திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராக கோ. காந்திநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த ப.மு. முருகேசன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதேபோல், கரூா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த கோ.காந்திநாதன், திண்டுக்கல்லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.