மானாவாரி பயிா்களுக்கு இழப்பீட்டு வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குஜிலியம்பாறை அருகே மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகையகோட்டை பகுதி விவசாயிகள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகையகோட்டை பகுதி விவசாயிகள்.

குஜிலியம்பாறை அருகே மகசூல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள நாகையகோட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகி ஏ.சவடமுத்து தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக் கோரியும், புதிய வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனா். இதுதொடா்பாக விவசாயிகள் கூறியதாவது:

கடந்த 2020ஆண் ஆண்டில் மானாவாரியாக மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்தோம். அதேபோல் வெங்காய சாகுபடியும் நடைபெற்றது. ஆனால், போதிய மழையில்லாத காரணத்தால் செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டது. இந்தப் பயிா்களுக்கு விவசாயிகள் சாா்பில் காப்பீடு செய்யப்பட்டிருந்து. மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com