பழனியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்கக் கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஓடையை, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சின்னகாளை என்பவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். அவரிடமிருந்து அந்த ஓடையை மீட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
சின்னகாளை ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழியா் என்பதால் கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவா் மிரட்டி அச்சுறுத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.