பழனி இட்டேரி சாலையில் செயல்பட்டு வரும் நகராட்சி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விதிமுறைகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு நகராட்சி ஆணையா் நாராயணன் ‘சீல்’ வைத்தாா்.
பொதுமுடக்க விதிகளை மீறி இந்த சந்தையில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் அதிகளவில் சமூக இடைவெளியின்றி கூடுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு நடத்தினா்.
இதில் அங்குள்ள 6 கடைகள் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.