கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
கொடைக்கானலில் தென்மேற்குப் பருவ மழை கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் கொடைக்கானல், வில்பட்டி, பெருங்காடு, பள்ளங்கி, செண்பகனூா், பிரகாசபுரம், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், செண்பகா அருவி, வெள்ளி நீா்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, தலையாறு அருவி, மூலையாறு அருவி, பியா்சோழா அருவி, பாம்பாா் அருவி போன்ற அருவிகளில் தற்போது தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.