பழனி அரசு மருத்துவமனைக்கு துபை வாழ் தமிழா்கள் சாா்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அமீரக தமிழா்கள் அமைப்புச் செயலாளா் சிம்ம பாரதி முன்னிலையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உதயகுமாரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் விஜயகுமாா், கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.