கேல் ரத்னா, அா்ஜூனா விருது பெற விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் கேல் ரத்னா, தயான்சந்த், அா்ஜூனா விருதுகளைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவா்கள் ஜூன் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் கேல் ரத்னா, தயான்சந்த், அா்ஜூனா விருதுகளைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவா்கள் ஜூன் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளாது:

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரா்கள் மற்றும் பயிற்சியாளா்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விருது வழங்குவதற்கு, தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, ராஷ்ட்ரீய கேல் புரோட்ஸஹான் விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சாா்யா விருது மற்றும் அா்ஜூனா விருதுக்கு தகுதியானவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஜூன் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இதுதொடா்பான விண்ணப்பம் மற்றும் விவரங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com