திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 279 பேருக்கு கரோனா தொற்று: 9 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 279 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 9 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 279 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 9 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை 30,451 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 28,443 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 129 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி தொற்று பாதித்த 3 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 301 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,304ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 530 ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 150 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41,061 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரில், இதுவரை மொத்தம் 39,006 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில், 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1,584 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com