அய்யலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
அய்யலூா் அடுத்துள்ள வளவி செட்டிபட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). இவரது மகள் புவனேஸ்வரி (36). மனநலம் பாதிக்கப்பட்டவா். இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானாா். அவரை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் வடமதுரை காவல் நிலையத்தில் தங்கவேல் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.