கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது
கொடைக்கானலில் கடந்த கடந்த ஒரு மாதமாக அதிகமான வெயிலும் பனியின் தாக்கமும் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதனால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்காக்களில் சீசனுக்காக நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளைப் பாதுகாக்க நிழல் வலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மழை பெய்ததால் நிழல் வலைகள் தற்காலிகமாக அகற்றப்பட்டன. இந்நிலையில் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காலை முதலே நல்ல வெயில் நிலவியது. மாலையில் மீண்டும் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.