திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விவாகரத்து கோரி மனு அளித்த பெண், திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்திலேயே வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து கோரி மனு அளித்த பெண், திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்திலேயே வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் என்.எஸ். நகரைச் சோ்ந்தவா் கண்ணம்மாள்(38). இவரது கணவா் முரளி. வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் கண்ணம்மாள் மனு அளித்துள்ளாா்.

இதையறிந்த கண்ணம்மாளின் தாயாா் முத்துலட்சுமி மற்றும் உறவினா் முனீஸ்வரன் ஆகியோா், முரளியுடன் சோ்ந்து வாழ்க்கை நடத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கண்ணம்மாள், திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com