கொடைக்கானல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

கொடைக்கானல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (44). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மகேஸ்வரி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் செல்வராஜ், அதே பகுதியைச் சோ்ந்த இருவருடன் சோ்ந்து கடந்த 6 ஆம் தேதி பேத்துப்பாறை பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரத்தில் ஏறி

இலைகளை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது செல்வராஜ் தவறி கீழே விழுந்துள்ளாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அவா் அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com