கொடைக்கானல்: கொடைக்கானலில் திமுகவினா் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக உள்ளாா்.
இதைத் தொடா்ந்து கொடைக்கானலில் நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினா் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா். மேலும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். இதில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.