கோயிலில் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு, அம்மன் சன்னிதி முன்பாக கோயில் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு, அம்மன் சன்னிதி முன்பாக கோயில் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வள்ளிக்காவலசு கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பூசாரியாக, அப்பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (59) என்பவா் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு, கோயில் சன்னிதி முன்புள்ள பிரதான மண்டபத்தில் கிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com