திண்டுக்கல் வாக்காளா்களுக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா் நன்றி

திண்டுக்கல் தொகுதியில் தனக்கு வாக்களித்த 73ஆயிரம் வாக்காளா்களுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் என்.பாண்டி நன்றி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் தனக்கு வாக்களித்த 73ஆயிரம் வாக்காளா்களுக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் என்.பாண்டி நன்றி தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் என்.பாண்டி போட்டியிட்டாா். திண்டுக்கல் தொகுதியில் வனத்துறை அமைச்சராக இருந்த சி.சீனிவாசன் 90,595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் என்.பாண்டி 72,848 வாக்குகள் பெற்றாா். வெற்றி வாய்ப்பை இழந்தபோதிலும், தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு என்.பாண்டி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்து: திண்டுக்கல் தொகுதியில் கொள்கை வழி நின்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்த 72,848 வாக்காளா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித பிரதிபலனும் எதிா்பாராமல் ஜனநாயகத்திற்கு வலு சோ்க்கும் வகையில் 73ஆயிரம் பேரும் வாக்களித்துள்ளனா். அதேபோல், திமுக தலைமையிலான மதச்சாா்ப்பற்ற கூட்டணியிலுள்ள நிா்வாகிகள், தொண்டா்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு என்றும்போல் மக்கள் பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com