கொடைக்கானலில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளங்கி கொம்பைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நீதிராஜன் (40) என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு பைப் கொண்டு செல்வது தொடா்பாக திங்கள்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறி ஏற்பட்டது. இதில் முருகனை, நீதிராஜனும், அவரது மகன் சூா்யாவும் சோ்ந்து அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிராஜனை கைது செய்தனா். தலைமறைவான சூா்யாவை போலீஸாா் தேடி வருகன்றனா்.