ஒட்டன்சத்திரம் அருகே பைக் மோதி விவசாயி பலி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகவேல் (60).

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புலியூா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகவேல் (60). இவா், புதன்கிழமை தனது வீட்டிலிருந்து புலியூா்நத்தம் பெருமாள் கோயில் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரைச் சோ்ந்த ராமசாமி (60) என்பவா், எதிா்பாராமல் சைக்கிள் மீது மோதியதில், சண்முகவேல் பலத்த காயமடைந்தாா். உடனே, அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சண்முகவேல் அன்றிரவே உயிரிழந்தாா். இது குறித்து இடையகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com