பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சியில் சனிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இப்பேரூராட்சியில் 14 ஆவது வாா்டு பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதனை அடுத்து சனிக்கிழமை ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகம் தடுப்பு ஏற்படுத்தி கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது.
மேலும் பேரூராட்சி செயல் அலுவலா் சுதா்சன் உத்தரவின் பேரில் ஆயக்குடி கடைவீதி பகுதியில் உணவகம் மற்றும் பால் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.