வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெறலாம்

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச.பிரபாவதி தெரிவித்துள்ளது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவுசெய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், 10, 12 ஆம் வகுப்புகள் மற்றும் பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2021 செப்.30 ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், 2021 அக்டோபா் முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் வந்து அணுகுவதை தவிா்த்து  இணையதளங்களில் படிவத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாகப் பூா்த்தி செய்து நவ.30 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com