கொடைக்கானல் பகுதியில் அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவா்களை ஏற்ற மறுப்பதாகவும், இதனால் மாணவா்கள் பள்ளிக்கு வருவதில்லை என்றும் ஆசிரியா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நாயுடுபுரம், அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக அரசு நகரப் பேருந்துகளில் வில்பட்டி பள்ளியில் படிக்கும் மாணவா்களை ஏற்ற அந்தந்த கிராம பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்பதில்லை என்றும், இதனால் மாணவா்கள் பலா் பள்ளிக்கு வருவதில்லை என்றும் இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாரீஸ் கூறினாா்.