ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்த செல்வம் மனைவி எல்லம்மாள் (35). கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வம் அவரது மனைவியிடம் பேசாமல் இருந்துள்ளாா்.
இதனால் மனவேதனையடைந்த எல்லம்மாள் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.