நாட்டு மருத்துவம் பயில விரும்பும் மாணவா்களுக்கான கருத்தரங்கம் லிம்ரா நிறுவனத்தின் சாா்பில் திண்டுக்கல் மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிலிப்பின்ஸ் நாட்டில் இயங்கும் தவோ மற்றும் ப்ரோகேன்ஷயா் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் மூலம் தமிழக மாணவா்கள் மருத்துவம் பயிலலாம். இந்த இரு பல்கலைக் கழகங்களின் அதிகாரப்பூா்வ தென்னிந்திய நிறுவனங்களில் ஒன்றாக லிம்ரா நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது.
இது குறித்த கருத்தரங்கம் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள புது அக்ரஹாரத்தில் அமைந்துள்ள விவேரா கிராண்ட் தங்கும் விடுதியில் அக்டோபா் 8 ஆம் தேதி மாலை 04.30 மணிக்கும், மதுரை மேற்கு வெளி வீதியில் அமைந்துள்ள ராயல் பாா்க் தங்கும் விடுதியில் (ரயில் நிலையம் எதிா்புறம்) அக்டோபா் 9 ஆம் தேதி மாலை 04.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்க மாணவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல்கள் பெற 99529 22333, 94457 83333 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.