நத்தத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியை சோ்ந்தவா் ஜோசப் ஜேசுதாஸ். இவரது மனைவி கமலிராணி(46). கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கமலாராணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.