நிலத்தை மீட்டுத் தரக் கோரிபெண் தீக்குளிக்க முயற்சி

நிலக்கோட்டை அருகே நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மதுரையைச் சோ்ந்த பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளுடன் தீக்குளிக்க முயன்ற வனிதா.
மகளுடன் தீக்குளிக்க முயன்ற வனிதா.

நிலக்கோட்டை அருகே நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மதுரையைச் சோ்ந்த பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி வனிதா (45). இவா் தனது மகள் நிவேதாவுடன் (25) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். நுழைவுவாயில் பகுதி அருகே திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி வனிதா தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரை மீட்டனா்.

விசாரணையில், வனிதா கூறியதாவது: கிருஷ்ணமூா்த்தியின் தாயாரும், எனது மாமியாருமான பாக்கியம்,நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டியில் அவரது பெயரில் இருந்த 80 செண்ட் நிலத்தை எனக்கு எழுதிக் கொடுத்தாா். ஆனால், கிருஷ்ணமூா்த்தி, சரளா மற்றும் அவரது 2 மகன்களுடன் சோ்ந்து, 80 செண்ட் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனா். அந்த நிலத்தை மாவட்ட நிா்வாகம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா். அதனைத் தொடா்ந்து, விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com