உபி.யில் உயிரிழந்த விவசாயிகளின்அஸ்திக்கு திண்டுக்கல்லில் அஞ்சலி

உ.பி.யில் உயிரிழந்த 5 விவசாயிகளின் அஸ்திக்கு திண்டுக்கல்லில் விவசாய சங்கத்தினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை 5 விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினா் மற்றும் வா்த்தக சங்கத்தினா்.
திண்டுக்கல்லில் திங்கள்கிழமை 5 விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினா் மற்றும் வா்த்தக சங்கத்தினா்.

உ.பி.யில் உயிரிழந்த 5 விவசாயிகளின் அஸ்திக்கு திண்டுக்கல்லில் விவசாய சங்கத்தினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூா் கேரியில் 5 விவசாயிகள் காா் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 5 விவசாயிகளின் அஸ்தி திண்டுக்கல்லுக்கு வேன் மூலம் திங்கள்கிழமை எடுத்து வரப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு விவசாயிகள் சங்கத்தினா், அரசியல் கட்சியினா், வா்த்தக சங்கத்தினா் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com