திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முதல்முறையாக விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவா் டி.மணிகண்டன் தலைமை வகித்தாா். 5 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதுதொடா்பாக மாவட்ட தலைவா் மணிகண்டன் கூறியதாவது:
விநாயகா் சதுா்த்தி வழிபாடு குறிப்பிட்ட கட்சி சாா்ந்த நிகழ்ச்சி அல்ல. அதை வெளிப்படுத்தும் வகையிலேயே காங்கிரஸ் கட்சியின் சாா்பில் முதல் முறையாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மும்மதத்தினரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனா் என்றாா்.
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு முன்னாள் தலைவா் முகமது சித்திக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் அன்பரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.