கொடைக்கானல் கோசன் சாலையில் சனிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்ததால் சிரமமடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக மழையில்லாமல் இருந்தது அவ்வப்போது காற்று வீசி வந்தது இந் நிலையில் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கோசன் சாலையில் மரம் விழுந்தது இதனால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகளும்,மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் பொது மக்களும் சிரமமடைந்ததனா் நீண்ட நேரத்திற்கு பிறகு வனத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று விழுந்த மரத்தை அகற்றினா் அதன்பின் போக்குவரத்து சீரானது .சுற்றுலாப் பயணிகளின் வருகை வாகனங்களில் அதிகரித்து காணப்பட்டதால் போக்குவரத்திற்கு சற்று சிரமம் ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைச்சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வனத்துறையினா் அகற்றினால் அடிக்கடி மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் எனவே மாவட்ட நிா்வாகம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.